19 September 2010

வாழைக்காய்

வாழைக்காயை பல விதமாக சமைக்கலாம்.

வாழைக்காய்களை தோல் சீவி, துண்டங்களாக் நறுக்கிக் கொண்டு, தண்ணீரில் போடவும். கொஞ்சம் உப்பு போட்டு தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும். பாதி வெந்தால் கூட போதும். தண்ணீரை இறுத்து விடவும்.

உளுத்தம்பருப்பு, மிளகு, வரமிளகாய் ஆகியவற்றை (எண்ணெயோ, தண்ணீரோ விடாமல்) வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வெந்த வாழைக்காயை போடவும். அரைத்த பொடியையும் போடவும்.

காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பருப்பு அரைத்த கறியாகவும், பொடி தூவிய கறியாகவும் செய்யலாம்.

வாழைக்காய் பொடி.
(மீனாக்ஷி அம்மாள், பகுதி 01)

வாழைக்காய்களை முழுதாகவோ, இரண்டாக நறுக்கியோ கொஞ்சமாக புளி கரைத்த நீரில் வேக விடவும். அல்லது நல்ல தணலில் காயை தோலுடன் போட்டு தோல் கருக சுட்டு எடுத்து உரித்துக் கொள்ளவும்.

3 காய்களுக்கு தேவையானவை :: மிளகாய் வற்றல் 6 - 8; துவரம் பருப்பு 2 டீஸ்பூன், உ.பருப்பு 2 டீஸ்பூன்கள், கடுகு தாளிக்க, பெருங்காயம் சிறிது.

வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் மேற்சொன்ன சாமான்களை போட்டு சிவக்க வறுக்கவும். மிக்ஸியில் வறுத்த சாமான்களை போட்டு, 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, கரகரப்பாக பொடி செய்து கொள்ளவும்.

உரித்து வைத்துள்ள வாழைக்காயை உதிர்த்து மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.


வாழைக்காய் பொரியல்.
(நன்றி: காயத்ரி வெங்கட், அவரது பதிவிலிருந்து)
















தேவையானவை


வாழைக்காய்- 1
சாம்பார்பொடி- 2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
பெருங்காயம்- சிறிதளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு


1. வாழைக்காயை நன்றாக அலம்பி, தோலைச் சீவி தனியே வைத்துக் கொள்ளவும்.

2. பிடித்த வடிவத்தில் வாழைக்காயைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

3. அடுப்பில் எண்ணெய்யிட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிதம் செய்து கொண்டு கடுகு வெடித்தவுடன் சீரகத்தைப் போட்டு வதக்கி விடவும்.

4. வாழைக்காய் துண்டுகளை தாளித்தவற்றுடன் போட்டு உப்பு போட்டு 1/4 டம்ளர் நீர் விட்டு மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும்.

5. பாதி வெந்ததும் சாம்பார்பொடி, பெருங்காயம் சேர்த்து திறந்து வைத்துக் கிளறி வரவும். அடிப்பிடிக்காமல் இருக்க எண்ணெய் ஊற்றவும்.

6. வறுவலாகத் தயாரானதும் அடுப்பை அணைத்து விட்டு பொரியலை வேறு பாத்திரத்திற்கு மாற்றிப் பரிமாறவும்.



RAW BANANA GRILL
(JAYASHREE VENKAT, New Delhi, 18-09-2010)

INGREDIENTS
Raw Banana - 2
Cashew nut paste - 3 tbsp
Green chilli paste - 1 tbsp
Fresh Cream - 1 tbsp
Hung curd - 2 tbsp
Cardamom powder - 1 tbsp
Crushed peppercorn - 1 tbsp
Salt - To taste


METHOD
Peel the raw bananas and cut it into three pieces. Boil and keep aside.


Mix cashew nut paste, cardamom powder, green chilli paste, cream, hung curd and salt together.


Now, marinate the banana with the above mixture.


Keep it for few minutes and then, cook it in a tandoor for about five minutes.


Serve hot.


வாழைக்காய் பிரட்டல்

1. வாழைக்காய்களை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் தண்ணீரில் போடவும். கொஞ்சம் மஞ்சள்தூளையும் சேர்த்து வேக விடவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிப்பை சேர்த்து, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

3. மிளகாய்த்தூளை தண்ணீரில் கலந்து் இதில் ஊற்றி, வேக வைத்த வாழைக்காய்களை போடவும்.

5. உப்பை சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும்.

வாழைக்காய் பிரட்டல் ரெடி.


வாழைக்காய் வறுவல்.

வாழைக்காய்களை தோல் சீவி, வட்ட வட்ட  வில்லைகளாக சீவிக் கொள்ளவும். வ்றுவல்-சீவியிலும் சீவிக்கொள்ளலாம்.

ஈரம் போக உலர்த்திக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், வாழைக்காய் சீவல்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

பேப்பர் டிஷ்யூவில் வைத்து எண்ணெய் போக வைக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மிளகாய்த் தூள் கலவையை பிசிறவும்.

இதே போன்று எல்லா சீவல்களையும் ஈடு-ஈடாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.




ராஜப்பா






வாழைத் தண்டு



வாழைத்தண்டு நார்ச் சத்து நிறைந்த, பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது ரத்தத்தை தூய்மைப்படுத்தும் குணம் கொண்டது. ரத்தக் கொழுப்பை குறைக்கும் வாரத்திற்கு இரண்டு முறையாவது வாழைத்தண்டை சமைத்து சாப்பிட வேண்டும்.

சிறுநீரக கற்கள் (KIDNEY STONES) கரைக்க / வெளியேற்ற வாழைத்தண்டு மிக நல்லது. தண்டின் சாறை தினமும் குடித்து வர, பல குடல்-ச்ம்மந்தப் ப்ட்ட நோய்கள் குணமாகும்.

வாழைத்தண்டு கறி

வாழைத்தண்டை நார் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, கொஞ்சம் மோர் சேர்த்த நீரில் போடவும். மோர் சேர்த்தால் வாழை கறுக்காமல் இருக்கும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வரமிளகாய் (கிள்ளிப் போட்டது) -- தேவையானால் உளுத்தம்பருப்பையும் போடலாம் --ஆகியவற்றை தாளித்து, தண்டை அலம்பி இதில் போடவும்.

ஒரு கைப்பிடி பயத்தம்பருப்பை இதன் மேல் போடவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

தண்ணீர் தெளித்து வேக விடவும்.

வெந்ததும் அடுப்பை அணைக்கவும்
 வாழைத்தண்டு கறி ரெடி. வேண்டுமானால் தேங்காய் துருவி சேர்த்துக் கொள்ளலாம்.

வாழைத்தண்டு கூட்டு

வாழைத்தண்டு கோசுமல்லி.

வாழைத்தண்டை நாரில்லாமல் சிறு துண்டங்களாக நறுக்கி, மோர் விட்ட தண்ணீரில் போடவும். பின்னர் நன்றாக அலம்பி, 1 டீஸ்பூன் உப்பு, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பிசிறவும்.

சற்று நேரம் கழித்து (MARINATE), ஒட்டப் பிழிந்து கொள்ளவும்.

இதில், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழியவும்.

சிறிது கருவேப்பிலையை கிள்ளிப் போடவும்.

சிறிது பெருங்காயத்தை கரைத்து ஊற்றவும்.

2 டீஸ்பூன்கள் எண்ணெயில், கடுகு, 2 பச்சை மிளகாய்கள் தாளித்துக் கொட்டவும்.


வாழைப்பூ உசிலி



வாழைப்பூ உசிலி

வாழைப்பூ, 1
துவரம்பருப்பு, 100 கி
கடலைப் பருப்பு, 75 கி
மிளகாய் வற்றல், 8
எண்ணெய், 3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க = கடுகு, பெருங்காயம்
உப்பு

செய்முறை
வாழைப்பூவை ஆய்ந்து, பொடிதாக நறுக்கி, சிறிது மோர் ஊற்றிய நீரில் போடவும்.

தண்ணீரில் வேக விடவும்.

தண்ணீரை இறுத்து, காயை தனியாக வைத்துக் கொள்ளவும்.

மேற்சொன்ன பருப்புகளை 30 நிமிஷம் ஊறவைக்கவும்.

மிளகாய் வற்றல், உப்பு போட்டு கரகரவென (வடை மாவு பதத்திற்கு) அரைக்கவும்.

பந்துகளாக உருட்டி, குக்கரில் ஆவியில் வேக விடவும்.

ஆறியதும், பருப்பு கலவையை உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

காயையும் பருப்பையும் போட்டு சுமார் 5 நிமிஷம் கிளறவும்.

உசிலி ரெடி.





வாழையடி வாழை

வாழைமரம் - மிக உபயோகமுள்ள ஒரு மரம். ஒரு முறை நட்டு விட்டால், “வாழையடி வாழையாக” தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.

வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுத்தப் படுகிறது. எல்லா விசேஷங்களுக்கும் வீட்டு வாசலில் வாழைமரத்தைக் கட்டுவது வழக்கம். வரலக்ஷ்மி விரதம், விநாயகர் பூஜை, ஸத்யநாராயண விரதம் போன்ற பூ்ஜைகளில் வாழைக்கன்றுகளை கட்டி வழிபடுகிறோம்.

வாழை இலையில் உணவு பரிமாறுவது நம் தென்னிந்திய விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
.
வாழைப் பூ


100 கிராம் வாழைப்பூவில்
கால்சியம் - 32 மி.கி.
பாஸ்பரஸ் - 42 மி.கி.
புரதம் - 1.3 மி.கி.
நார்ச்சத்து - 1.3 மி.கி.
மற்றும் இரும்புச் சத்து, வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பூ துவர்ப்புத் தன்மை உள்ளதால் இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது,.

வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைக்கும். இரத்தம் சுத்தமாகும். இரத்த ஓட்டம் சீராகும். இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வாழைப் பூ சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு கலந்து அருந்தினால் வெட்டை நோய், குருதி வெள்ளை, வயிற்றுக் கடுப்பு நீங்கும். மலச் சிக்கலைப் போக்கும். மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும். தாதுவை விருத்தி செய்யும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள்,

வாழைப்பூ - கால் பாங்கு
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டுப்பல் - 4
இஞ்சி - 1 துண்டு
நல்ல மிளகு - 5 எடுத்து சூப் செய்து காலை உணவுக்குப்பின் அருந்தி வந்தால், சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும்.

வாழைத்தண்டு சிறுநீரக கற்களை அகற்றக்க்கூடிய ஒரு சிறந்த மருந்து என்பது யாவரும் அறிந்த ஒன்று.

வாழைக்காயில் நிறைய புரத சத்தும், மாவு சத்தும் உள்ளன. வாழைக்காய் சேர்க்காத பண்டிகை / ஸ்ராத்த சமையல்களே கிடையாது.

வாழைப் பழத்தில் மாவுச் சத்து 27.0%, புரத சத்து 1.2%, கொழுப்பு சத்து 0.3%, நார் சத்து 0.5%, ஈரப்பதம் 70%, வைட்டமின்கள் /தாதுப் பொருட்கள் 1.0% அளவிற்கு உள்ளன. பொட்டாஷியம் அதிக அளவில் உள்ளது.

வாழைப் பழத்தினை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொடுக்க சீதபேதி நிற்கும். குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதிக்கு நன்கு கனிந்த பழங்களை பயன்படுத்த வேண்டும். நன்கு குழைத்து கொடுக்க வேண்டும்.

SRIDHAR from New Delhi writes, "Apart from all the benefits of banana it has a great feature, it works as an enzyme. It can control loose motion (if you have 4-5 bananas in one go) and it can release constipation.



And u must have noticed one thing,
Azhughi pona vazai pazathail kooda endha oru poochiyo, puzuvo anuguvadhu illai. Highly medicated fruit."

வாழை நார் பூத்தொடுக்க பயன்படுகிறது. வாழை நார் கப்பலில் எண்ணெய் கசிவை நிறுத்துவதில் மிக பயனுள்ளதாக இருக்கிறது.

வாழைப்பட்டை: வாழைமரத்தின் அடி பாகத்திலிருந்து இது கிடைக்கிறது. மிகவும் குளிர்ச்சியானது; மருத்துவ குணங்கள் நிரம்பியது. நெருப்புக் காயங்கள் பட்டு (FIRE BURNS) உடலில் புண்கள் ஏற்படும்போது, வாழைப்பட்டைகளை படுக்கை போல போட்டு அதன் மீது படுக்க வைப்பார்கள்.

வாழை குறித்து இன்னும் விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.

20 July 2010

SPINACH SAUCE

Spinach Sauce
(Spinach = Paalak)

Ingredients

1 kg spinach, blanched, squeezed, dry and coarsely chopped.
1 cup onion, diced
4 cloves garlic, minced
1 tbsp butter
250 grams cooked noodles, or pasta, or potatoes
Cheese, freshly grated

Method

Heat butter in a pan

Add onion and saute until transparent.

Add garlic and saute for a minute.

Add spinach (paalak) and stir-fry until bright green.

Remove from flame, and cool.

When cool, blend to a paste using a little water if required.

When done, reheat gently and add cooked noodles or pasta or potatoes.

Stir properly so it is well coated.

Serve warm with grated cheese.

rajappa
11:25 AM
20 July 2010

** from Readers' Digest,  January 2010

05 March 2010

பருப்பு உசிலிகள்

பருப்பு உசிலிகள்

பருப்பு உசிலிகள், அதுவும் கொத்தவங்காய் உசிலி, தமிழ்நாட்டின் விசேஷ உணவு. எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மிகப் பிடித்தது. மோர்க்குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால், ருசியோ ருசி!

# 1. கொத்தவரங்காய் பருப்பு உசிலி


கொத்தவரங்காய், 500 கிராம்
துவரம்பருப்பு, 100 கி
கடலைப் பருப்பு, 75 கி
மிளகாய் வற்றல், 8
எண்ணெய், 3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க = கடுகு, பெருங்காயம்
உப்பு

காயை அலம்பி, பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.

தண்ணீரில் வேக விடவும்.

தண்ணீரை இறுத்து, காயை தனியாக வைத்துக் கொள்ளவும்.

பருப்புகளை 30 நிமிஷம் ஊறவைக்கவும்.

மிளகாய் வற்றல், உப்பு போட்டு கரகரவென (வடை மாவு பதத்திற்கு) அரைக்கவும்.

பந்துகளாக உருட்டி, குக்கரில் ஆவியில் வேக விடவும்.

ஆறியதும், பருப்பு கலவையை உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.

காயையும் பருப்பையும் போட்டு சுமார் 5 நிமிஷம் கிளறவும்.

உசிலி ரெடி

# 2. பீன்ஸ் பருப்பு உசிலி

எல்லா உசிலிகளுக்கும் செய்முறை ஒரேமாதிரிதான்.

# 3. வாழைப்பூ பருப்பு உசிலி


# 4. முட்டை கோஸ் பருப்பு உசிலி


ராஜப்பா
5:00 PM
5 March 2010

சேப்பங்கிழங்கு Seppankizhangu

சேப்பங்கிழங்கு, ARBI or Arvi (hindi), Colacosia or TARO(English), Chamagadda (telugu)

தமிழ்நாட்டில் நாம் சேப்பங்கிழங்கை கறி பண்ணவும், வறுவல் பண்ணவும், மோர்க்குழம்பில் போடவும் உபயோகிக்கிறோம்.

சேப்பங்கிழங்கு கறி (Roast)

சேப்பங்கிழங்கு, 1 கிலோ
எண்ணெய், 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப் பொடி, 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி, 1 டீஸ்பூன்
உப்பு, 2 டீஸ்பூன்



கிழங்கை வேகவைக்கவும். தோல் உரித்து, கொஞ்சம் சிறிய துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பெரிய தட்டில் கிழங்கைப் போட்டு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து பிசறிக் கொள்ளவும். சிறிது நேரம் (15 நிமிஷம்) ஊறட்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், பிசறி வைத்துள்ள கிழங்கைப் போட்டு, மிதமான தீயில் வதக்கவும்.

தேவையானால் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

கிழங்கு நன்றாக roast ஆனதும், கடுகு தாளித்து இறக்கவும்.

வறுவல்

கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

முன்பு போலவே கிழங்குடன் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு பிசறிக் கொள்ளவும்.

வாணலியில் 1/4 லிட்டர் எண்ணெய் விட்டு, சூடானதும், கிழங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரிக்கவும்.

சேப்பங்கிழங்கை மோர்க்குழம்பிலும் (செய்முறை) போடலாம்.

கர்னாடகா, மஹாராஷ்டிரா மற்றும் பல வட மாநிலங்களில் சேப்பங்கிழங்கு இலையை சமைத்து சாப்பிடுகிறார்கள். Alu Chi Wadi மஹாராஷ்ட்ராவில் மிக பிரசித்தம்.

Alu chi Wadi

சேம்பு இலைகளை (Alu che paana) காம்பு நீக்கி, கடலைமாவு, புளி விழுது, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியா பொடி, பெருங்காயம், உப்பு இவை அடங்கிய கலவையில் பிரட்டி, ஆவியில் வேக விடவும்.

பின்பு, வேக வைத்த இலைகளை நறுக்கி, அப்படியேவோ அல்லது கொஞ்சம் எண்ணெயில் வதக்கியோ சாப்பிடலாம்.

ராஜப்பா
11:30 காலை
05-03-2010

02 March 2010

சேனைக்கிழங்கு YAM

சேனைக்கிழங்கு, SURAN (hindi), Kandha Gatta (telugu), Elephant Yam (English) என இது அறியப் படுகிறது.

சேனைக்கிழங்கு கறி (ரோஸ்ட்)
தேவையானவை
சேனைக்கிழங்கு 1 கிலோ
மிளகாய்ப் பொடி, 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி, 1/2 டீஸ்பூன்
உப்பு,
தாளிக்க: 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய், கடுகு,

சேனைக்கிழங்கின் உறுதியான, தடிமனான தோலை நீக்கவும்.

கிழங்கை நன்றாக அலம்பிக் கொள்ளவும்.

சிறிய சதுரங்களாக (small cubes) நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.

கடுகு வெடித்தவுடன், அலம்பிய கிழங்கை போடவும்.

மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

வாணலியை மூடி வைத்து கிழங்கை மிதமான தீயில் வேகவைக்கவும். (தண்ணீர் ஊற்றக் கூடாது.

சில கிழங்குகள் சீக்கிரமாகவும், சில கிழங்குகள் தாமதமாகவும் வேகும்.
வெந்ததும், மூடியை எடுத்து விட்டு, கிழங்கு மொறுமொறுப்பாகும் வரை (CRISP) வதக்கவும்.

கறி ரெடி

சேனைக்கிழங்கு வறுவல்

ஒரு கிலோ சேனைக்கிழங்கை தோல் நீக்கி, சிறிய சதுரங்களாக (Cubes) நறுக்கி, நன்றாக அலம்பிக் கொள்ளவும்.

ஒரு பெரிய நியூஸ்பேப்பரில் துண்டங்களை கொட்டி, உலர விடவும்.

மிளகாய்த்தூள் 4 டீஸ்பூன், உப்பு 2 டீஸ்பூன் இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.


வாணலியில் 500 கிராம் எண்ணெயை சூடாக்கி, இரண்டு கைப்பிடி துணடங்களை போடவும்.

துண்டங்கள் பொரிந்ததும், எடுத்து டிஷ்யூ பேப்பரில் போடவும். எண்ணெய் வடிந்ததும், துண்டங்களில் மிளகாய் தூள் + உப்பு கலவையை சிறிது தூவவும்.

காற்றுப் புகாத பாத்திரத்தில் போடவும்.

இதே போன்று எல்லாக் கிழங்கையும் கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுத்து, மிளகாய், உப்பு தூவி, பாத்திரத்தில் போடவும்.

கடைசியில் பாத்திரத்தை நன்கு குலுக்கி, மிளகாய் தூள் உப்பு சமமாக பரவும்படி செய்யவும்.

வறுவல் ரெடி

c. சேனைக்கிழங்கு அவியலில் போட மிகச் சிறந்த காய்.


ராஜப்பா
11:30 காலை
02-03-2010

01 March 2010

பீர்க்கங்காய் Ridge Gourd

பீர்க்கங்காய் (தமிழ்), பீரக்காயா (தெலுங்கு), Toorai (ஹிந்தி) , Ridge Gourd (ஆங்கிலம்) என இது அறியப்படுகிறது.

மருத்துவ விசேஷங்கள்:
பீர்க்கங்காயில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் அறவே கிடையாது. நார்சசத்து, விட்டமின் C, Riboflavin, Zinc, thiamin, iron, magnesium, manganese சத்துக்கள் நிரம்பியது. குளிர்ச்சியானது.

இனி சில பீர்க்கங்காய் சமையல்களை பார்ப்போமா?

முதலில், பீர்க்கங்காய் கூட்டு

பீர்க்கங்காயை நன்கு அல்ம்பி, லேசாக தோல் சீவிக் கொள்ளவும்.
சதுரங்களாக CUBES நறுக்கிக் கொள்ளவும்.

PEERKAN KAI cut for Koottu

குக்கரில் 50 கிராம் பயத்தம்பருப்பு, காய், மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள்,  கொஞ்சம் உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

குக்கர் ஆறியதும் 1/2 டீஸ்பூன் ஜீரகம், சிட்டிகை பெருங்காயம் போட்டு கலக்கவும்.

இன்னொரு சிறிய வாணலியில் கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 வரமிளகாய் தாளிக்கவும்.

22-06-2018 We made this KOOTTU

கூட்டு ரெடி

அடுத்து, பீர்க்கங்காய் துகையல்.
லேசாக தோல் சீவி, காயை நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 3 வரமிளகாய் இவற்றை சிவக்க வறுக்கவும். வறுத்ததை தனியாக எடுத்து வைக்கவும்.

அதே வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, பீர்க்கங்காயை வதக்கவும்.

வறுத்த உ-பருப்பு, மிளகாயை சிறிது புளி சேர்த்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். வதக்கின காயை மிக்சியில் போட்டு, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். பீர்க்கங்காயில் தண்ணீர் சத்து நிரம்ப இருப்பதால் தனியாக தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

சாதத்தில் பிசைந்து சாப்பிட துகையல் ரெடி.

அடுத்து, பீர்க்கங்காய் புளிக்குழம்பு.

லேசாக தோல் சீவி காயை நறுக்கிக் கொள்ளவும்.
நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைக்கவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், 2 பச்சை மிளகாய் (கீறிக்கொள்ளவும்), தாளிக்கவும்.

காயை இதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

புளியை கரைத்து ஊற்றி, 1 ஸ்பூன் சாம்பார் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

புளி வாசனை போனதும் 1/2 ஸ்பூன் அரிசி மாவு கரைத்து ஊற்றவும். சிறிது வெல்லம் சேர்க்கவும்.

புளிக்குழம்பு ரெடி.

கடைசியாக, பீர்க்கங்காய் வறுவல்.

காயை தோலுடன் வில்லைகளாக் நறுக்கிக் கொள்ளவும்.

1 டீஸ்பூன் மிளகாய் பொடியுடன், கொஞ்சம் உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.

கலவையை காய் வில்லைகளில் பிசறி வைத்துக் கொள்ளவும்

200 கிராம் எண்ணெயை வாணலியில் ஊற்றி சூடாக்கவும்.

3 டீஸ்பூன் அரிசி மாவை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, வில்லைகளை இதில் லேசாக பிரட்டிக் கொண்டு, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

ராஜப்பா
10:30 காலை
01-03-2010

On 22 June 2018 we made this Kootu

25 February 2010

Sprouted Peas Usal

முளை கட்டிய பட்டாணி உசல்

தேவையானவை
சுண்டல் பட்டாணி (150 கிராம்) முளை கட்டியது.
வெங்காயம், 1 பொடியாக நறுக்கியது.
தக்காளி, 2, பொடியாக நறுக்கியது.
மிளகாய்ப் பொடி, 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி, சிறிது,
கரம் மசாலா பொடி, 1/2 டீஸ்பூன்

தாளிக்க : எண்ணெய், கடுகு, ஜீரகம்

செய்முறை

முளை கட்டிய பட்டாணியை தண்ணீர் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

(உங்களுக்கு பிடிக்குமானால், 1 டேபிள்ஸ்பூன் பூண்டு-இஞ்சி விழுதை போட்டு வதக்கவும்).

மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி போட்டு வதக்கவும்.

நறுக்கிய தக்காளியைப் போட்டு 5 நிமிஷம் வதக்கவும்.

வெந்த பட்டாணியை தண்ணீருடன் சேர்த்து போட்டு 5 நிமிஷம் கொதிக்க் விடவும்.

உசல் ரெடி!

ராஜப்பா
4:40 மாலை
25-02-2010

All About Sprouts - முளை கட்டிய பயறு

What are Sprouts? முளை கட்டிய பயறு என்றால் என்ன?
Sprouting is the practice of soaking, draining and then rinsing seeds at regular intervals until they germinate, or sprout.
Moisture, warmth, and in most cases, indirect sunlight are necessary for sprouting. Some sprouts, such as moong whole (பச்சைப்பயறு), can be grown in the dark. Little time, effort or space is needed to make sprouts.

How To make Sprouts? எப்படி பண்ணுவது?
To sprout seeds, the seeds are moistened, then left at room temperature in a vessel. Many different types of vessels can be used. One type is a simple glass jar with a piece of cloth secured over its rim.  Any vessel used for sprouting must allow water to drain from it, because sprouts that sit in water will rot quickly. The seeds will swell and begin germinating within a day or two.

Sprouts are rinsed as little as twice a day, but possibly three or four times a day in hotter climates, to prevent them from souring. Each seed has its own ideal sprouting time. Depending on which seed is used, after three to five days they will have grown to two or three inches in length and will be suitable for consumption. If left longer they will begin to develop leaves, and are then known as baby greens.

Usefulness of Sprouts முளை கட்டிய பயறு சாப்பிடுவதால் வரும் நன்மைகள்

The amazing power of Sprouts
Ever wondered why sprouted seeds, despite being "the perfect food known to man", remain much of an enigma as far as their benefits are concerned?? Well, because they are so completely natural, require no processing and so easy on the pocket that then true value is not realized.

Seeds are life just waiting to be born. Sprouts are an "explosion of life". Sprouted seeds are a staple diet of several oriental civilizations and are well known for their powerful nutritive and healing properties.


 A Nutritive Powerhouse
Sprouts bear the largest relative amount of nutrients per unit of intake of any food known to man. They have enough first - quality proteins to be classified as "complete". Many sprouted seeds such as those of moong whole (பச்சைப் பயறு) and கொத்துக்கடலை contain all the essential amino acids in their "free" state, which means that more nutrients reach the cells with less food.

 Sprouting increases the vitamin content of a seed dramatically. The vitamin C value of wheat increases 600% in the early sprouting period. Sprouts contain more vitamin C than oranges. In a discovery, the vitamin laetrile, known for its success in cancer therapy was found to increase over a 1000% in the sprouted seed.

Enzymes, considered the key to longevity are greatly activated in the sprouting process. The absence of enzymes produces that "tired, run down feeling".

Sprouts are the best "living food". In fact, they are so alive that they are still growing when you eat them.

Sprouts - A boon to mankind.
More importantly, sprouts are totally chemical-free, leave no waste, are delicious when raw and are super low in calories. They are by far the best food for us. Try them!! Sprouts have been known to turn even the most cynical of men around.

எந்தெந்த பயறுகளை முளை கட்டலாம்?

பச்சைப் பயறு, கொத்துக்கடலை, சுண்டல் பட்டாணி etc.

பச்சைப்பயற்றை 100 கிராம் தண்ணீரில் 9-10 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்னர், தண்ணீரை இறுத்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

பச்சைப்பயறு 7-8 மணி நேரத்தில் முளை கட்டிவிடும். மற்ற பயறுகள் இன்னும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

இடை இடையில் தண்ணீர் தெளிக்கவும்.

முளை வந்ததும் உபயோகிக்கலாம்.

பச்சையாக (raw)  ஸாலட் மாதிரியும் சாப்பிடலாம், அல்லது சமைத்தும் சாப்பிடலாம்.

Sampoornamvilas-ல் ருசியான, செய்வதற்கு எளிதான பல recipes சொல்லப்பட்டுள்ளன.

ராஜப்பா
12:35 பகல்
25-02-2010

22 January 2010

Sumangali Prarthanai Samaiyal

நம் வீடுகளில் செய்யும் சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பண்ண வேண்டிய சமையலை விவரமாக காண்போம்.

5 சுமங்கலிகளையும், 1 கன்யாப் பெண்ணையும் அழைக்க வேண்டும். இந்த 5 பேர்களில் வீட்டுப் பெண்களையும் சேர்க்க வேண்டும்; வெளி ஸ்தீரிகளையும் சேர்க்கலாம். இந்த ஆறு பேரோடு ஒரு ஸ்வாமி இலையையும் சேர்த்து மொத்தம் ஏழு இலைகள் முதலில் போட வேண்டும்.

சுமங்கலிகளையும் கன்யாப் பெண்ணையும் முதலில் உட்கார வைத்து பரிமாறும்போது, ஸ்வாமி இலையிலும் பரிமாற வேண்டும், ஆனால் அதில் அப்போது யாரும் உட்காரக் கூடாது. சுமங்கலிகள் சாப்பிட்ட பிறகு, வீட்டில் உள்ள சுமங்கலி யாரேனும் (நாட்டுப் பெண்கள், பெரியம்மா, சித்தி போன்றோர்) உட்காரலாம்.

[”சமைத்துப் பார்” - எஸ் மீனாக்ஷி அம்மாள் எழுதியது - பாகம் 3 பக்கம் 216-ல் மிக விவரமாக சொல்லப்பட்டுள்ளது]

தேவையான பொருட்கள்: 30 பேருக்கு

மஞ்சள் பொடி – 50 கி
அரிசி – 5 கிலோ
துவரம் பருப்பு – 1 1/2 கிலோ
கடலைப்பருப்பு – 1 கிலோ
உளுத்தம் பருப்பு – 3/4 கிலோ
பயத்தம் பருப்பு – 1/2 கிலோ
மிளகாய் வத்தல் – 1/4 கிலோ
தனியா – 1/4 கிலோ
புளி – 1/4 கிலோ
வெல்லம் – 2 கிலோ
நல்லெண்ணெய் – 1/2 கிலோ
ரீஃபைண்ட் எண்ணெய் – 1 1/2 கிலோ (சமையல் எண்ணெய்)
வெண்ணெய் – 3/4 கிலோ
கடுகு – 50 கி
மிளகு – 50 கி
சீரகம் – 50 கி
வெந்தயம் – 50 கி
மிளகாய்த்தூள் – 50 கி
மைதா மாவு – 1 கிலோ
சாதா உப்பு – 1 கிலோ (டாட்டா உப்பு)
சர்க்கரை – 1 1/2 கிலோ
காஃபி பவுடர் – 1/2 கிலோ (தேவையைப் பொறுத்தது)
பால் – தயிர் தோய்ப்பதற்கு – 5 லிட்டர்
பால் – காஃபி, டீ – 5 லி

கறிகாய்கள்

வாழைக்காய் – 8
அவரைக்காய் – 1 கிலோ
பூசணிக்காய் – 3/4 கிலோ
தக்காளிப்பழம் – 2 கிலோ
வெண்டைக்காய் – 1/2 கிலோ
மாங்காய் – பெரியதானால் 4, சின்னதானால் 6
வெள்ளரிக்காய் – 1/4 கிலோ
பச்சைமிளகாய் – 1/2 கிலோ
இஞ்சி – 1/4 கிலோ

வாழையிலை – நுனி இலை 30

சுமங்கலிப் ப்ரார்த்தனை சமையல்

பாயஸம் (தேங்காய் அல்லது கடலைப்பருப்பு)
உளுந்து வடை
பருப்பு. போளி
தித்திப்பு பச்சடி
தயிர் பச்சடி
பயத்தம் பருப்பு கோசுமல்லி
பழங்கள் ஸாலட்
வாழைக்காய் கறி
அவரைக்காய் கறி
சௌசௌ / பூசணிக்காய் / புடலங்காய் கூட்டு
தேங்காய் துகையல் (அல்லது) கொத்தமல்லி துகையல்
கலந்த சாதம் (தேங்காய், எலுமிச்சை, புளியஞ்சாதம் – ஏதாவது ஒன்று))
மாங்காய் ஊறுகாய்
பருப்பு
நெய்
வெண்டைக்காய் சாம்பார் (அல்லது கத்தரிக்காய் ரசவாங்கி)
பூசணி (அல்லது வேறு ஏதேனும் நாட்டுக் காய்) மோர்க்குழம்பு
தக்காளி ரசம்
தயிர்

பானகம்
நீர்மோர்
சுக்கு வெல்லம்

இன்னும் தேவையான சில பொருட்கள்
நிறைகுடம் (குடம் நிறைய தண்ணீருடன்)
நலங்கு மஞ்சள்.

சுமங்கலிகளுக்குக் கொடுக்க வேண்டிய தாம்பூலம்

வெற்றிலை, பாக்கு
மஞ்சள்
குங்குமம்
தேங்காய்
வாழைப்பழம்
புஷ்பம்
சீப்பு
கண்ணாடி
கண்ணாடி வளையல் (4+4)
மருதாணி (பொடி அல்லது Cone)
ரவிக்கைத் துண்டு


ராஜப்பா
22-01-2010
பகல் 12 மணி

DAHI BHINDI

DAHI BHINDI Ingredients ...